தமிழக அரசு விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
தேனி: தேனியில் உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் தமிழக அரசின் விருது பெற்ற நாட்டுக்கு உழைத்த நல்லவர் மருதுசகோதரர்கள் என்ற நூலை எழுதிய எழுத்தாளர் குப்புசாமிக்கும்,சென்னை உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய கவிதை போட்டியில் பரிசு பெற்ற புலவர் தேவகுரு,த.கருணைச்சாமி ஆகியோருக்கு பாராட்டு விழா சங்கத்தலைவர் தேனி முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
பொருளாளர் கணேசபாண்டி முன்னிலை வகித்தார்.பரிசு பெற்றவர்களை ஆசிரியர்கள் ஏ.சி .சிவபாலு,ஆறுமுகம் சக்தி விண்மணி,ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழாவில் நவநீதகிருஷ்ணன்,இங்கர்சால்,ஜீவா உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ,இலங்கை தமிழருக்காக ,உயிர் தியாகம்,முத்துக்குமரனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு வாழ்த்து தெரிப்பது என தீர்மானிக்கப்பட்டது. சந்திராயன் 1 திட்ட இயக்கநர் மயில்சாமி அண்ணாத்துரைக்கும்,சிறந்த இசை அமைப்பிற்காக குளோப் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கும் பாராட்டு தெரிவிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
சங்க உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications