இலங்கை-நெல்லையில் கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு
நெல்லை: இலங்கை தமிழர்களுக்காக நெல்லை மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்படும் என அதன் பிஷப் தெரிவித்துள்ளார்
பாளையங்கோட்டை சாந்தி நகர் குழந்தை ஏசு பேராலய வளாகத்தில் பாளையங்கோட்டை மறைமாவட்ட கத்தோலிக்க பிஷப் ஜூடு பால்ராஜ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையி்ல்,
நம்முடைய சொந்த சகோதர, சகோதரிகள் தினமும் இலங்கை ராணுவத்தின் கொடூர தாக்குதலில் பலியாகி வருகின்றனர். இந்த தாக்குதலை மத்திய, மாநில அரசுகள் இணைந்து தடுத்து நிறுத்த வேண்டும்.
இதை வலியுறுத்தும் வகையில் இலங்கையில் அமைதி ஏற்பட பாளையங்கோட்டை கத்தோலிக்க மறை மாவட்ட தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை, ஜெபவழிபாடு, பிராத்தனை ஆகியவை நடத்த முடிவு செய்யபபட்டு உள்ளது.
நாளை அனைத்து தேவாலயங்களிலும் பிஷப்பின் சுற்றரிக்கை வாசிக்கப்பட்டு இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு அஞ்சலியும், விடுதலை கிடைக்க பிரார்த்தனை செய்யப்படும். அங்கு உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும்.
ஐ.நா போர் நிறுத்த வலியுறுத்த வேண்டும் என வருகிற 13ம் தேதி கத்தோலிக்க பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் 4 மணிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications