இந்திய தூதரக அதிகாரிகள் பிளாக்-ஃபேஸ்புக் பயன்படுத்த தடை

இவற்றைப் பயன்படுத்துவதால் முக்கிய தகவல் பரிமாற்றங்கள், தகவல்கள் லீக் ஆகி விடும் என்பதால்தான் இந்த தடையை பிறப்பித்துள்ளது வெளியுறவுத்துறை.
கடந்த எட்டு மாதங்களாக தனது கம்ப்யூட்டர் கட்டமைப்பு பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து மத்திய வெளியுறவுத்துறை பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தது. இதில் எந்த வகையில் தகவல்கள் கசியலாம், எப்படி அவற்றைப் பாதுகாக்கலாம் என்பது குறித்து ஆராயப்பட்டு வந்தது.
இதைத் தொடர்ந்து தற்போது வெளியுறவுத்துறை அதிகாரிகள், தூதரக அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஃபேஸ்புக், பிளாக், அலுவலக இமெயில்கள் தவிர்த்த பிற இ மெயில்கள் உள்ளிட்டவற்றை யாரும் பயன்படுத்தக் கூடாது. பிளாக்கில் எழுதக் கூடாது, பிளாக்கை உருவாக்கிக் கொள்ளவும் கூடாது.
கடந்த வாரம் அதிகாரிகளுக்கு ஒரு சர்க்குலரை வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுப்பியிருந்தது. அதில் ஃபேஸ்புக், ஆர்குட், இபிபோ உள்ளிட்ட தளங்களுக்கு ல்ல வேண்டாம். அதேபோல, காஸா உள்ளிட்ட இசை தளங்களுக்குச் சென்று இசையை டவுன்லோட் செய்யக் கூடாது, பிளிக்கர், பிகாஸா உள்ளிட்ட புகைப்பட இணையதளங்களுக்குச் செல்லக் கூடாது. அங்கு எந்த புகைப்படங்களையும் யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்பது உள்ளிட்ட பல புதிய கட்டுப்பாடுகள் இடம் பெற்றுள்ளதாம்.
மேலும் ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் உள்ளிட்டவற்றை அலுவலகப் பணிக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்ற கட்டுப்பாடுகள், பிரதமர் அலுவலகத்திற்கும் விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள், தேசிய தகவல் தொடர்பு மையம் அளித்துள்ள அதிகாரப்பூர்வ இமெயில்களை மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வேறு மெயில்களை பயன்படுத்தக் கூடாது எனவும் அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனராம்.
ஆனால் இந்த மெயில்களை அக்சஸ் செய்வதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும், அரசின் கட்டுப்பாடுகள் பெரும் சிரமத்தைக் கொடுக்கும் எனவும் தூதரக அதிகாரிகள் புலம்புகின்றனராம்.
டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை தலைமை அலுவலகத்தில் கிட்டத்தட்ட 600 கம்ப்யூட்டர்கள் உள்ளன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவற்றில் இன்டர்நெட் இணைப்பு உள்ளது. தற்போது இவை அனைத்தும் முறைப்படுத்தப்பட்டு அவற்றின் பயன்பாட்டுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த கம்ப்யூட்டர்களில் கடுமையான பயர்வால்கள், ஸ்பாம் மெயில் ஃபில்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இன்டர்நெட்டைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்கும்படி வெளியுறவுத்துறை அலுவலக பணியாளர்கள், அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனராம்.
-
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications