இது படுகள திருவிழா..!

இதன் பின்னணியில் ஒரு வித்தியாசமான கதையும் உள்ளது.
மதுரை அருகே திருமங்கலத்தை அடுத்துள்ளது காரைக்கேணி கிராமம். இங்கு சுமார் 500 ஆண்டுக்கு முன்பு தென்னந்தோப்பு என்ற நாட்டை குணசீலன் என்ற குறுநில மன்னர் ஆண்டு வந்தார்.
கவசகோட்டை என்ற நாட்டை சத்தியவேந்தன் என்ற குறுநில மன்னர் ஆண்டு வந்தார். 2 மன்னர்களுக்கும் இடையே அடிக்கடி போர் நடப்பது வழக்கம்.
ஒருமுறை குணசீலன் வேட்டைக்கு சென்றபோது வல்லத்தான் குருவியை விரட்டி சென்று வில்லால் அடித்தார். அடிபட்ட குருவி கவசகோட்டை நாட்டுக்குள் விழுந்தது. இந்த குருவியை குணசீலன் எடுக்க சென்றபோது கவசகோட்டை மன்னர் தடுத்தார்.
இந்த பிரச்சனை குறித்து காரைக்கேணி நாட்டு அரசர் அரசுதேவர் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்தது. அதில் மன்னர்கள் 2 பேரும் நேருக்கு நேர் போரிட வேண்டும். இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அந்த குருவி அவருக்கே சொந்தம் என்று பஞ்சாயத்து பேசப்பட்டது.
தென்னந்தோப்பு அரசர் குணசீலன் தனது ராணியிடம் சண்டைக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்படும் முன்பு ஒரு ஆட்டை கத்தியால் குத்தி குடலை உருவி அதை ஆட்டின் கொம்பிலேயே கட்டினார். மேலும் சேவலை துணியால் போர்த்தி கத்தியால் குத்தி குடலை உருவினார்.
ஆடும், சேவலும் உயிருடன் இருந்தால் தான் நான் போரில் வெற்றி பெற்று திரும்புவேன். இறந்து விட்டால் நானும் இறந்து விட்டதாக கருதிக் கொள் என்று ராணியிடம் கூறிவிட்டு சண்டைக்கு சென்றார்.
தென்னந்தோப்பு மன்னர் சண்டையில் கொல்லப்பட்டார். மன்னர் வாரிசுகளில் பலரும் கொல்லப்பட்டனர். ஆனால் ஒரு குதிரை வீரரும் எஞ்சிய மன்னரின் வாரிசும் தப்பி விடுகின்றனர். ஆடும், சேவலும் இறந்து விடுகின்றன.
இதனை நினைவூட்டும் விதமாக காரைக்கேணி மக்கள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த படுகளத் திருவிழாவை நடத்துகின்றனர். தப்பிப் பிழைத்த குதிரை வீரரின் வாரிசுகள் தான் இந்த விழாவை நடத்துகின்றனர்.
நேற்று முன் தினம் இரவும் இந்த விழா நடந்தது. ஒரு ஆட்டின் குடலை உருவி இறந்த மன்னரின் வாரிசான சாமியாடி ராசாத்தி அம்மாள் மாலையாக போட்டு கொண்டார். ஒரு சேவலை சிவப்பு துணியால் போர்த்தி கத்தியால் குத்தி குடலையும் உருவினர்.
இதையடுத்து பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் மன்னரின் வாரிசுகளிடம் ஜாதி, மத பேதமின்றி பலரும் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
இந்த விழாவைக் காண காரைக்கேணியை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் குவிந்திருந்தனர்.
-
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications