இது படுகள திருவிழா..!

இதன் பின்னணியில் ஒரு வித்தியாசமான கதையும் உள்ளது.
மதுரை அருகே திருமங்கலத்தை அடுத்துள்ளது காரைக்கேணி கிராமம். இங்கு சுமார் 500 ஆண்டுக்கு முன்பு தென்னந்தோப்பு என்ற நாட்டை குணசீலன் என்ற குறுநில மன்னர் ஆண்டு வந்தார்.
கவசகோட்டை என்ற நாட்டை சத்தியவேந்தன் என்ற குறுநில மன்னர் ஆண்டு வந்தார். 2 மன்னர்களுக்கும் இடையே அடிக்கடி போர் நடப்பது வழக்கம்.
ஒருமுறை குணசீலன் வேட்டைக்கு சென்றபோது வல்லத்தான் குருவியை விரட்டி சென்று வில்லால் அடித்தார். அடிபட்ட குருவி கவசகோட்டை நாட்டுக்குள் விழுந்தது. இந்த குருவியை குணசீலன் எடுக்க சென்றபோது கவசகோட்டை மன்னர் தடுத்தார்.
இந்த பிரச்சனை குறித்து காரைக்கேணி நாட்டு அரசர் அரசுதேவர் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்தது. அதில் மன்னர்கள் 2 பேரும் நேருக்கு நேர் போரிட வேண்டும். இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அந்த குருவி அவருக்கே சொந்தம் என்று பஞ்சாயத்து பேசப்பட்டது.
தென்னந்தோப்பு அரசர் குணசீலன் தனது ராணியிடம் சண்டைக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்படும் முன்பு ஒரு ஆட்டை கத்தியால் குத்தி குடலை உருவி அதை ஆட்டின் கொம்பிலேயே கட்டினார். மேலும் சேவலை துணியால் போர்த்தி கத்தியால் குத்தி குடலை உருவினார்.
ஆடும், சேவலும் உயிருடன் இருந்தால் தான் நான் போரில் வெற்றி பெற்று திரும்புவேன். இறந்து விட்டால் நானும் இறந்து விட்டதாக கருதிக் கொள் என்று ராணியிடம் கூறிவிட்டு சண்டைக்கு சென்றார்.
தென்னந்தோப்பு மன்னர் சண்டையில் கொல்லப்பட்டார். மன்னர் வாரிசுகளில் பலரும் கொல்லப்பட்டனர். ஆனால் ஒரு குதிரை வீரரும் எஞ்சிய மன்னரின் வாரிசும் தப்பி விடுகின்றனர். ஆடும், சேவலும் இறந்து விடுகின்றன.
இதனை நினைவூட்டும் விதமாக காரைக்கேணி மக்கள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த படுகளத் திருவிழாவை நடத்துகின்றனர். தப்பிப் பிழைத்த குதிரை வீரரின் வாரிசுகள் தான் இந்த விழாவை நடத்துகின்றனர்.
நேற்று முன் தினம் இரவும் இந்த விழா நடந்தது. ஒரு ஆட்டின் குடலை உருவி இறந்த மன்னரின் வாரிசான சாமியாடி ராசாத்தி அம்மாள் மாலையாக போட்டு கொண்டார். ஒரு சேவலை சிவப்பு துணியால் போர்த்தி கத்தியால் குத்தி குடலையும் உருவினர்.
இதையடுத்து பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் மன்னரின் வாரிசுகளிடம் ஜாதி, மத பேதமின்றி பலரும் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
இந்த விழாவைக் காண காரைக்கேணியை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் குவிந்திருந்தனர்.
-
நைஸா பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. தவெக விஜய் அரசியலில் அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பம் -
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம்.. சட்டென மாறிய வானிலை! மழை வெளுக்கப்போகுது! -
தூண்டில் போடும் டெல்லி! தன் பாட்டுக்கு விஜய்.. இப்ப தான் ஆட்டம் ஆரம்பம்.. 2026-ன் கிங் மேக்கர் யார்? -
10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூரில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு! -
எடப்பாடி பெயரை கூட.. மோடி சொல்லாதது இதற்குத்தானா? பாஜகவின் ‘மாஸ்டர் பிளான்’ ஸ்கெட்ச்.. போச்சு -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம்












Click it and Unblock the Notifications