வைரமுத்துவுக்கு மே. வங்கத்தின் சாதனா சம்மான் விருது
பாரதிய பாஷா பரிஷத் என்ற பெயரில் இயங்கி வரும் இந்தக் ழகம், ஆண்டுதோறும் 14 மொழிகளில் சிறந்து விளங்குவோரைத் தேர்வு செய்து விருதினை அளித்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான தமிழுக்கான விருது வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது.
ரூ. 51 ஆயிரம் பொற்கிழி, பாராட்டுப் பத்திரம் ஆகியவை இந்த விருதில் அடக்கம். மேலும், வைரமுத்துவின் படைப்புகளை பல்வேறு இந்திய மொழிகளில் பரிஷத்தே மொழி பெயர்த்து வெளியிடும்.
கொல்கத்தாவில் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் விழாவில் விருதினைப் பெறுகிறார் வைரமுத்து.
தமிழ் இலக்கிய உலகைச் சேர்ந்த ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, சிவசங்கரி ஆகியோர் ஏற்கனவே இந்த விருதினை முன்பு பெற்றுள்ளனர்.
விருது குறித்து வைரமுத்து கூறுகையில், "தமிழுக்கு செம்மொழி பெருமையை முதல்-அமைச்சர் கருணாநிதி பெற்று தந்திருக்கும் காலப் பொழுதில், இந்த விருதை தமிழ் படைப்பாளிகளுக்கு வங்காள மண் வழங்கியிருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். மகாகவி தாகூர் பிறந்த இலக்கிய மண்ணில் இந்த விருதை பெறுவதில் பெருமைப்படுகிறேன் என்றார்.