கும்பாபிஷேகம்: ஜூலை 1ல் ராமேஸ்வரம், 2ல் திருச்செந்தூர்
திருச்செந்தூர்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில் மற்றும் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ஆகியவற்றுக்கு வரும் ஜூலை 1 மற்றும் 2ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் புகழ் பெற்ற கோயில்களில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலும், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலும் முதன்மை பெற்றது.
இந்து சமய அறநிலைத்துறை முடிவின் படி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் ரூ. 23 ட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு, ஜூலை 1ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கும்.
அதே போன்று, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஜூலை 2ம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11.15 மணிக்குள்ளும் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
பக்தர்கள் வருகையை முன்னிட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சிறப்பு பேருந்து வசதிகள், மருத்துவ வசதிகள் போன்றவைகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.