பாளையில் தலித் கலைவிழா
நெல்லை: அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளையெட்டி ஆண்டுதோறும் அம்பேத்கார் கலை இலக்கிய பண்பாட்டு கழகம் சார்பில், கலைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு விழா இன்று (23ம்) தேதி நடைபெறுகிறது.பாளை பஸ் நிலையம் எதிரே உள்ள சுடலைமாடன் கோவில் மைதானத்தில் நடைபெறும் இந்த தலித் கலைவிழாவை மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை செயலர் கிறிஸ்துதாஸ் காந்தி தொடங்கி வைக்கிறார்.
அமைச்சர் மைதீன்கான், மாநில சிறுபாண்மையினர் ஆணைய உறுப்பினர் மவுரியா மெட்டபால், மத்திய மாசுகட்டுபாட்டு வாரிய உறுப்பினர் செல்லப்பன், அரவண் அடிகள், உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த கலைவிழாவில் நையாண்டி மேளம், பறையாட்டம், கரகாட்டம், சக்கையாட்டம், சில்லாட்டம், கழியல் ஆட்டம், ஓயில் ஆட்டம், சிலம்பாட்டம், பொய்கால் குதிரையாட்டம், பொம்மலாட்டம், கடவுமத்தளம் ஆகிய பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மேலும் நாடகம், தனிப்பாடல், சிறப்புரைகளும் இடம்பெறும். மாலை 6 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சி இரவு முழுவதும் நடைபெறும். சிறப்பான சமூக சேவை செய்தவர்களுக்கு விழாவில் டாக்டர் அமபேத்கார் விருது வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications