விழுப்புரத்தில் வைணவ சபை மாநாடு
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: ஸ்ரீ நம்மாழ்வார் ஐக்கிய வைணவ சபை மாநாடு இன்று முதல் மூன்று நாட்களுக்கு விழுப்புரத்தில் நடக்கிறது.
ஸ்ரீ நம்மாழ்வார் ஐக்கிய வைணவ சபை மாநாடு 29ம் தேதியான இன்று துவங்குகிறது. மாலை 4 மணிக்கு ஸ்ரீவைகுண்டவாச பெருமாள் சன்னிதியில் இருந்து பஜனை கோஷ்டிகள், ஆண்டாள் கோஷ்டிகள் மற்றும் பக்தர்கள் பாசுரம் முழங்க மாநாடு நடக்கும் இடம் வரை ஊர்வலம் நடக்கிறது.
இதைத் தொடர்ந்து கோவில் ஆர்ச்சகர் வாசுப்பட்டாச்சாரியர் மங்களசாசனம் செய்து வைக்கிறார். இரவு 8 மணிக்கு அகன்ட திவ்ய நாம கீர்த்தனைகள் மற்றும் பஜனை நடக்கிறது. 29ம் தேதி வைணவ சபை உறுப்பினர் பாக்கியலட்சுமி ராமானுஜதாஸ் பாசுரம் பாடுகிறார். மே 30 மற்றம் 31ம் தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
மாநாட்டில் உ.வே. ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரியர் தலைமையில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications