Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நின்றுபோன சாரல்-பயணிகளை ஏமாற்றிய குற்றாலம்

Subscribe to Oneindia Tamil

Courtralam fails
குற்றாலம்: குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் சற்று முன்னதாகவே துவங்கியது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்த நிலையில் கேரளாவில் கடந்த 3 தினங்களாக பருவ மழை பெய்யவில்லை. இதனால் குற்றாலத்திலும் சாரல் இல்லை.

சாரல் இல்லாததால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்தும் வெகுவாக குறைந்து விட்டது. மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதிகளில் ஒரு ஓரத்தில் மட்டும் சிறிதளவு தண்ணீர் விழுகிறது.

இதனால் மெயின் அருவியில் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மெயின் அருவியில் தண்ணீர் மிகவும் குறைவாக விழுவதால் ஏராளமானோர் ஐந்தருவியை நோக்கி படையெடுக்கின்றனர். ஐந்தருவிகளிலும் 2 பிரிவுகளிலும் மட்டுமே தண்ணீர் ஒரளவு கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே கடந்த வாரம் துவங்கிய சீசன் வங்க கடலில் ஏற்பட்ட காற்று மண்டலத்தால் உருவானது என்றும், சீசன் துவங்குவதற்கு இன்னும் ஒரு வாரம் ஆகும் என குற்றாலம் பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+