நின்றுபோன சாரல்-பயணிகளை ஏமாற்றிய குற்றாலம்
Subscribe to Oneindia Tamil

சாரல் இல்லாததால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்தும் வெகுவாக குறைந்து விட்டது. மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதிகளில் ஒரு ஓரத்தில் மட்டும் சிறிதளவு தண்ணீர் விழுகிறது.
இதனால் மெயின் அருவியில் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மெயின் அருவியில் தண்ணீர் மிகவும் குறைவாக விழுவதால் ஏராளமானோர் ஐந்தருவியை நோக்கி படையெடுக்கின்றனர். ஐந்தருவிகளிலும் 2 பிரிவுகளிலும் மட்டுமே தண்ணீர் ஒரளவு கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே கடந்த வாரம் துவங்கிய சீசன் வங்க கடலில் ஏற்பட்ட காற்று மண்டலத்தால் உருவானது என்றும், சீசன் துவங்குவதற்கு இன்னும் ஒரு வாரம் ஆகும் என குற்றாலம் பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications