குன்னூர்-சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி!
Subscribe to Oneindia Tamil
குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இரண்டு நாள் பழக் கண்காட்சி இன்று துவங்குகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவை முன்னிட்டு சுற்றுலா பயணிகளைக் கவர மலர், காய்கறி கண்காட்சிகள் நடத்தப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இன்று காலை மணிக்கு பழக் கண்காட்சி துவங்குகிறது. மாவட்ட கலெக்டர் ஆனந்த ராவ் விஷ்ணு பாட்டீல் தலைமையில் கதர்வாரியத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கண்காட்சியை துவக்கி வைக்கிறார்.
பூங்கா நுழைவு வாயிலில் பழங்களால் ஆன அலங்கார வளைவு, 16 அடி நீளத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்களை கொண்டு அமைக்கப்பட்ட கப்பல், 3,500 எலுமிச்சை பழங்களால் அமைக்கப்பட்ட டால்பின், 5 ஆயிரம் கார்னேசன் மலர்களால் அமைக்கப்பட்ட உலக உருண்டை போன்றவை கண்காட்சியில் இடம் பெறுகிறது.
இந்த கண்காட்சியில், 100க்கும் மேற்பட்ட அரிய வகை பழங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. கண்காட்சி நாளை நிறைவடைகிறது.













Click it and Unblock the Notifications