பழனியில் வைகாசி விசாக திருவிழா துவக்கம்!
Subscribe to Oneindia Tamil
பழனி: பழனி கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழா நிகழ்ச்சிகள் தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும்.
முத்துக்குமார சுவாமிக்கு வசந்த மாலை அணிவிக்கப்பட்டு, திருவுலா வருவதால் இத்திருவிழா வசந்தோற்சவம் என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
விழாவின் ஆறாம் நாளான ஜூன் 4ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும்.
விழாவின் ஏழாம் நாளான, ஜூன் 5ல் வைகாசி விசாகத்தில் 4.30 மணிக்கு தேரடியில் இருந்து தேரோட்டம் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையர் ராசமாணிக்கம், அறங்காவலர் குழு தலைவர் எஸ்.வி.பாலசுப்ரமணியம், அறங்காவலர்கள் கார்த்தி ப.சிதம்பரம், குண்டன், நாகராஜன், இந்திரா ஆகியோர் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications