திறந்தநிலை பல்கலையில் எம்.எட். படிப்பு
சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் எம்.எட் பட்டப் படிப்பு தொடங்கப்படவுள்ளது.
இது குறித்து பல்கலை துணை வேந்தர் கல்யாணி அன்புச்செல்வன் கூறுகையில்,
திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.11.54 கோடியில் புதிய வளாகம் கட்ட முதல் கட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் 3ம் தேதி தொடங்கப்படவுள்ளது.
2011ம் கல்வி ஆண்டு முதல் புதிய வளாகத்தில் பல்கலைக்கழகம் செயல்படும்.
இப்போது 80க்கும் மேற்பட்ட தொலைநிலைப் படிப்புகளை இந்தப் பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது.
புதிய படிப்புகளாக அச்சு இதழியியல், ஊரக வளர்ச்சி நிர்வாகம், பி.எஸ்சி (கணிதம்), பி.பி.ஏ. (சில்லரை விற்பனை, மேலாண்மை), தகவல் தொடர்பு, அறிவுசார் சொத்துரிமை, சமூகப் பணி, தொலைக்காட்சி செய்தித் தயாரிப்பு உள்ளிட்ட படிப்புகளும் தொடங்கப்படுகின்றன.
மேலும், எம்.எட். படிப்பு தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications