For Daily Alerts
Just In
ஏற்காட்டில் மலர்க் கண்காட்சி!
ஏற்காட்டில் 34வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி ஜூன் 5ம் தேதி தொடங்கி 7ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
இதையொட்டி வண்ண மலர்களால் ஆன வரவேற்பு வளைவு வைக்கப்படுகிறது. அண்ணா பூங்காவில் சுமார் 300 இடங்களில் 11,000 அழகு பூந்தொட்டிகள் வைக்கப்படவுள்ளன.
ஆஸ்டர், மேரி கோல்டு, மேரி கோல்டு மினியேச்சர், பால்சம், டெய்ஸி, டாலியா, சால்வியா, கிரைசாந்தியம், கேட்கஸ் போன்ற வண்ண மிகு மலர்கள் தொட்டிகளில் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த கோடை விழாவிற்கு தமிழகம் மட்டும் இன்றி, கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Story first published: Tuesday, June 2, 2009, 10:12 [IST]