கந்தூரி விழா-நாகூரில் சந்தனக் கூடு ஊர்வலம்
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டினம்: நாகூர் தர்காவின் 452ம் ஆண்டு கந்தூரி விழா சந்தனக் கூடு ஊர்வலம் நேற்று இரவு நடந்தது.
தமிழகத்தில் இஸ்லாமியர்களின் புகழ் பெற்ற ஆன்மிக வழிபாட்டுத் தலமாக நாகூர் பாதுஷா சாகிபு ஆண்டவர் தர்கா போற்றப்படுகிறது. சிறந்த மத நல்லிணக்க வழிபாட்டுத் தலமாகவும் இருந்து வருகிறது.
இந்த தர்காவின் 452ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த மே 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூன் 1ம் தேதி வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக் கூடு ஊர்வலம் நேற்று இரவு நாகையிலிருந்து நாகூர் வரை நடைபெற்றது.
இதற்காக பல்வேறு அலங்கார ஊர்திகளில் சந்தனக் கூடுகள் எடுத்து வரப்பட்டன. அவை கண்ணாடி மற்றும் ஜரிகை வேலைபாடுகளால் வடிவமைக்கப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
7ம் தேதி கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications