இனிய திசைகள்-7ம் ஆண்டு துவக்கம் விழா நிகழ்ச்சி

ஐக்கிய அரபு எமிரேட்சின் ராசல்கைமா நகரில் இனிய திசைகள் தமிழ் மாத இதழின் 7வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் சாயிருல் மில்லத், முதுவைக் கவிஞர் மவ்லவி ஏ. உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ ஆகியோர் பேசுகையில், ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இனிய திசைகள் மாத இதழ் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளுக்காக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
உலமாக்கள் நலவாரியம் ஏன் அமைக்கப்பட வேண்டும் என்பதனை விரிவாக சமுதாயத்திற்கு விளக்கிய இதழ் இனிய திசைகள் என்றால் மிகையாகாது.
மேலும் சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை மாதந்தோறும் இருப்பும் பொறுப்பும் என்ற தலைப்பில் சேமுமு எழுதி வருவது சமுதாய மக்களுக்கு மிகவும் பயனளிப்பதாய் இருந்து வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க இதழுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் ஆதரவளிக்க வேண்டும் என்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜாஹிர் உசேன் செய்திருந்தார். நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications