இலக்கியப்பீடம் 100வது சிறப்பிதழ்-ஆர்.எம். வீரப்பன் வெளியிட்டார்
சென்னை: சென்னையில் நடந்த மாத இழத் இலக்கியப்பீடத்தின் 100வது சிறப்பிதழை எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன் வெளியிட்டார்.
இலக்கியப்பீடம் 100வது சிறப்பிதழ் வெளியீட்டு விழா சென்னை பிலிம்சேம்பரில் நேற்று நடந்தது. இந்த விழாவில் இலக்கியப்பீடம் மாத இதழ் ஆசிரியர் விக்கிரமன் வரவேற்றுப் பேசினார். விழாவிற்கு எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன் தலைமை வகித்தார். அவர் இலக்கியப்பீடம் 100வது சிறப்பிதழை வெளியிட்டுப் பேசினார்.
முதல் பிரதியை, தொழிலதிபர் திரிசக்தி' சுந்தர்ராமன், வி.ராமலிங்கம், கஜபதி, ஜெயசண்முகம், பெரியண்ணன், கார்முகிலோன், இதயவாணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
சிறந்த கவிதைக்கான கவிஞர் குலோத்துங்கன் விருது மற்றும் ரூ. 5 ஆயிரம் பொற்கிழி புலவர் இரா.ராமமூர்த்திக்கு வழங்கப்பட்டது. இதை சமீபத்தில் முனைவர் பட்டம் வென்ற அருப்புக்கோட்டை தொழிலதிபர் டி.ஆர்.தினகரன் வழங்கினார்.
டி.ஆர்.தினகரனை அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க பொதுச் செயலாளர் கவிஞர் சுடர் முருகையா பாராட்டிப் பேசினார். இவர்களை தொடர்ந்து தென்கச்சி சுவாமிநாதன் உள்ளிட்ட பலரும் பேசினர். கண்ணன் விக்ரமன் நன்றி உரை கூறினார்.