For Daily Alerts
Just In
புதுவையில் முனைவர் இரா. திருமுருகனார் நினைவேந்தல் நிகழ்ச்சி
புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 3ம் தேதி மறைந்த தமிழறிஞர் முனைவர் இரா. திருமுருகனார் நினைவேந்தல் நிகழ்ச்சி வருகிற 13ம் தேதி நடைபெறுகிறது.
03.06.2009 இல் இயற்கை எய்திய மூத்த தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி, 13.06.2009 சனிக்கிழமை காலை 9.30 மணிக்குப் புதுச்சேரிப் பேருந்து நிலையம் அருகில் உள்ள உருளையன் பேட்டை, செங்குந்தர் வீதியில் உள்ள J.V.R மகாலில்(மாஸ் உணவகம் எதிரில்) நடைபெற உள்ளது.
தமிழ் உணர்வாளர்கள் பலரும் கலந்துகொண்டு நினைவேந்தல் உரையாற்ற உள்ளனர் என்று முனைவர் மு. இளங்கோவன் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.
Comments
Story first published: Wednesday, June 10, 2009, 15:06 [IST]