நாகர்கோவிலில் தமிழ் இணையப் பயிலரங்கம்
நாகர்கோயில்: தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் குமரிமுனையில் தமிழ் இணையப் பயிலரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள தமிழ் மணம் இணையத்தள நிறுவனமும், கலிங்கத்தமிழ் ஆய்வு நிறுவனமும்,மானிங் ஸ்டார் பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து இதற்குத் திட்டமிட்டுள்ளன. இந்த நிறுவனங்களுடன் இணைந்து அமிர்தா ஊடக ஆய்வுமையமும், அமுதம் மாத இதழும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றன.
கணிப்பொறி,இணையத்தில் ஆர்வம் உடையவர்கள் இதில் பங்கேற்றுப் பயன் பெறலாம்.
இடம்: மானிங் ஸ்டார் பாலிடெக்னிக் கல்லூரி, சுங்கான்கடை, நாகர்கோயில்(கன்னியாகுமரி மாவட்டம்)
நாள்: 20.06.2009, காரி(சனி)க் கிழமை
நேரம்: காலை 9.00 முதல் மாலை 5.00 மணிவரை
பயிலரங்கில் தமிழ்த்தட்டச்சு, மின்னஞ்சல், வலைப்பூ உருவாக்கம், புகழ்பெற்ற இணையத்தளங்கள் குறித்து காட்சி விளக்கத்துடன் செய்திகள் பேசப்படும்.
மின்னிதழ்கள், நூலகங்கள், விக்கிபீடியா, விக்கி மேப்பியா பற்றியும் எடுத்துரைக்கப்படும்.
புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன், சேலம் செல்வமுரளி, ஒரிசா பாலு ஆகியோர் பயற்சியளிக்க உள்ளனர்.
பயிலரங்கில் கலந்துகொள்ள உரூவா 100 பதிவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். பகலுணவு உண்டு.
பதிவு செய்ய இறுதிநாள்: 18.06.2009.
முதலில் வருபவருக்கு முதல்வாய்ப்பு
தொடர்புக்கு
9994352587
9790307202
9789575900












Click it and Unblock the Notifications