சிக்குன்குனியா, டெங்குவை ஒழிக்க உதவும் மரபனு மாற்ற கொசு - சென்னையி்ல் ஆய்வு ரீதியாக வளர்ப்பு

இந்த மரபனு மாற்ற கொசு, டெங்கு மற்றும் சிக்குன்குனியாவை ஒழிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண் கொசுக்களில் மரபணு மாற்றம் செய்யப்பட்டு்ள்ளதால் அவை டெங்கு மற்றும் சிக்குன்குனியாவை பரப்பும் கிருமிகளை ஏந்திச் செல்லாது. மேலும் இந்தக் கொசுக்கள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படும் கொசுக்களிலும் இந்த நோய் பரப்பும் திறன் இருக்காது. இதன்மூலம் நோய் பரப்பும் கொசுக்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.
இந்த கொசு குறித்த ஆய்வை மேற்கொள்ள மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறை அனுமதி அளித்துள்ளது. தற்போது படப்பையில் உள்ள சர்வதேச பயோடெக்னாலஜி மற்றும் டாக்சிகாலஜி கழகத்தில் இந்த கொசு ஆய்வில் உள்ளது.
தற்போது ஆய்வில் 2வது கட்டம் முடிவடைந்துள்ளதாம்.
இதுகுறித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் விசிட்டிங் ஆய்வாளரும், ஆக்ஸ்போர்ட் இன்செக்ட் டெக்னாலஜிஸ் கழகத்தின் (ஆக்ஸிடெக்) தலைவருமான எஸ்.எஸ்.வாசன் கூறுகையில், டெங்கு, சிக்குன்குனியா ஆகியவற்றைப் பரப்பும் கொசுக்களுடன் போராடி அவற்றை ஒழிக்கும் தன்மையுடன் கூடியதாக இந்த மரபனு மாற்ற கொசு (ஏடெஸ் ஏஜிப்டி -Aedes aegypti) இருக்கும்.
2002ம் ஆண்டு ஆக்ஸிடெக் உருவாக்கப்பட்டது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்படும் அறிவியல், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை வர்த்தகமயாக்கும் முயற்சியில் இது ஈடுபட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் இது ஆய்வு மற்றும் அமலாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
உலக மக்கள் தொகையில் 55 சதவீதம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர். 120 நாடுகளில் இந்த டெங்கு பெரும் பாடுபடுத்தி வருகிறது. எனவேதான் இதை ஒழிக்க பெரும் பொருட் செலவில் மரபனு கொசுவை உருவாக்கும் ஆய்வில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது.
விரைவில் 3வது கட்ட பரீட்சார்த்த ஆய்வுகள் நடைபெறவுள்ளன. அதன் பின்னர் இந்தத் தொழில்நுட்பம் வெளியிட்படும்.
இந்த ஆய்வு டெங்கு மற்றும் சிக்குன்குனியாவை அடியோடு ஒழிப்பது என்பதற்காக அல்ல. அப்படி செய்யவும் முடியாது. மரபனு மாற்ற கொசுக்கள் மூலம் டெங்கு, சிக்குன்குனியா பரவுவது குறையும் என்பதுதான் இதில் முக்கிய அமசம் என்றார் வாசன்.
-
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை!












Click it and Unblock the Notifications