For Daily Alerts
Just In
காஞ்சி சாரதா பீடம் ரூ. 1.25 கோடியில் புனரமைப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள சிருங்கேரி சாரதா பீடம் ரூ. 1.25 கோடி மதிப்பில் புனரமைக்கப்படுகிறது.
இதற்கான பூமி பூஜை இன்று காஞ்சிபுரத்தில் நடந்தது. சிருங்கேரி மடத்தின் தலைமை நிர்வாகி கவுர் இதைத் தொடங்கி வைத்தார்.
பத்தாயிரம் சதுர அடிப் பரப்பளவில் புதுக் கட்டுமானப் பணிகள் நடைபெறவுள்ளன.
கடந்த 700 வருடங்களுக்கும் மேலாக சிருங்கேரி சாரதா பீடம் காஞ்சிபுரத்தில் இயங்கி வருகிறது. இந்த பீடத்தின் கிளைக் கட்டடத்தை இடித்து விட்டு, தரை மற்றும் முதல் தளம் கொண்ட பிரமாண்டக் கட்டடம் கட்டப்படவுள்ளது.
இங்கு வேத பாடசாலை செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Thursday, June 25, 2009, 16:35 [IST]