அதிகாலையில் நகர் சோதனை-தென்காசியை கலக்கிய கலெக்டர்
Subscribe to Oneindia Tamil

அடிக்கடி சோதனைகள் நடத்தி மக்கள் காவலனாக வலம் வரும் அவர் இன்று அதிகாலை 4 மணி அளவில் தென்காசி நகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுபாடு, மின்விளக்கு வசதி, சுதாகார சீர்கேடு குறித்து பத்திரிக்கைகளில் வந்த செய்திகளை கண்டு கீழப்புலியூரில் இருந்து அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
அதிகாலை சாரல் மழையையும், குளிரையும் பொருட்படுத்தாமல் தென்காசி நகராட்சி பகுதிகளிலுள்ள அனைத்து தெருக்களிலும் நடந்தே சென்று கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ள தகவல் அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மாவட்டத்திலேயே பெரிய நகராட்சியாக உருவாகி வரும் தென்காசி பகுதியில் மக்கள் பிரச்சனை அறிந்து அதிகாலையில் திடீர் ஆய்வு நடத்திய கலெக்டரை பொதுமக்கள் புகழ்ந்தனர்.












Click it and Unblock the Notifications