மகாபலிபுரத்தில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் மூங்கில் ரிசார்ட்
சென்னை: தமிழகத்தி்ல் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த மகாபலிபுரத்தில் மூங்கில் ரிசார்ட் ஒன்று துவக்கப்பட்டு்ள்ளது.
சுற்றுலாவை மேம்படுத்த தமிழக அரசு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், சில தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளை கவரும் வகையில் மகாபலிபுரத்தில் ரிசார்ட் ஒன்றை அமைத்துள்ளது.
இங்கு சுற்றுலா பயணிகளுக்கு ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் செய்யப்படும். இதை தவிர்த்து புத்துணர்ச்சிக்காகன சிகிச்சை முறைகள், ஆயுர்வேத பஞ்ச கர்மா முறை, அக்குபிரஷ்ஷர், யோகா மற்றும் தியானம் போன்றவை மூலம் மருத்துவ சுற்றுலாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
இதை தவிர்த்து நீச்சல் குளம், வெண்ணீர் குளியல் என சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளுகம் இருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் துவக்கப்பட்ட இந்த ரிசார்ட் அமைக்கும் பணிகள் விரைவாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆயுர்வேத கல்லூரி ஒன்றின் முதல்வர் சிவ ராமகிருஷ்ணன் கூறுகையில், மகாபலிபுரத்தில் மூங்கிலால் செய்யப்ப்டட ஆயுர்வதே மற்றும் மருத்துவ ரிசார்ட்கள் துவக்கப்பட்டுள்ளன. இது வெளிநாட்டினரை மிகவும் கவரும். சுற்றுச்சூழலை காக்கும் நண்பனாக விளங்கும் என்றார்.
தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தி்ன் பொது விவகார மானேஜர் ரவி கூறுகையில், தற்போது இங்கு 75 காட்டேஜ்கள் இருக்கின்றன. சைவம், அசைவம், சைனீஸ் உணவுகள் கிடைக்கும் என்றார்.
மகாபலிபுரத்தில் துவக்கப்பட்டிருக்கும் இந்த மூங்கில் ரிசார்ட்க்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தமிழகத்தில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களுக்கும் இது விரிவுப்படுத்தப்படும் என தெரிகிறது.
-
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
சென்னைக்கு சரிபட்டு வராது.. டபுள் டெக்கர் ஓபன் டாப் பஸ் திட்டத்தை கைவிடும் எம்டிசி.. பயணிகளுக்கு ஏமாற்றம் -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
இந்தியாவின் பெரிய ரிங் ரோட்டில்.. வருது ராட்சச ரயில் பாதை.. தமிழக அரசு கிரீன் சிக்னல்! தரமான முடிவு -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி!












Click it and Unblock the Notifications