For Quick Alerts
For Daily Alerts
Just In
திருவாரூர் ஆழித்தேரோட்டம் - ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இன்று ஆழித் தேரோட்ட நிகழ்ச்சி வழக்கமான உற்சாகத்துடன் நடந்தேறியது.
வரலாற்று சிறப்புமிக்கதும் ஆசியாவிலேயே மிகப் பெரிய தேருமான திருவாரூர் தியாகராஜர் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது.
தேரோட்டத் திருவிழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இன்று காலை ஆழித் தேரோட்டம் தொடங்கியது. அமைச்சர் மதிவாணன், நாகை எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
கீழவீதியில் தொடங்கிய தேரோட்டம் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக இன்று மாலை மீண்டும் கீழ வீதிக்கே வந்து தேர் நிலையை அடையும்.
Comments
Story first published: Thursday, July 9, 2009, 13:40 [IST]