சென்னையில் போலீசாருக்கு பயிற்சி தரும் யுஎஸ் ராணுவம்

கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி தீவிரவாதிகள் மும்பையில் கடல் வழியாக வந்து தாக்குதல் நடத்தியதை அடுத்து மத்திய அரசு சென்னை, மும்பை, கொல்கத்தாவில் என்எஸ்ஜி கிளைகளை திறந்தது.
இதை தொடர்ந்து சென்னையின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க அங்கு போலீஸ் அகாடமி ஒன்றும் துவக்கப்ப்டடுள்ளது. வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் சுமார் 129 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த அகாடமி, ஐபிஎஸ் பயிற்சிகள் அளிக்கப்படும் ஹைதராபாத் போலீஸ் அகாடமிக்கு இணையாக கட்டப்பட்டுள்ளது.
இந்த அகாடமியில் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரிகள், டிஎஸ்பிக்கள் உள்ளிட்டோருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தீவிரவாதிகளின் கடல்வழி அச்சுறுத்தலை முறியடிப்பது தொடர்பாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் இங்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
இந்த பயிற்சிகளை வழங்குவதற்காக அமெரிக்க கப்பற்படை மற்று சிஐஏவில் பணியாற்றிய 10 அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர். அவர்கள் மாநில போலீஸ், கடலோர பாதுகாப்பு படை, துணை ராணுவத்தினருக்கு பயிற்சி கொடுத்து வருகின்றனர்.
சுமார் 30 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சியில் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த 30 போலீசாருக்கு பயிற்சி கொடுக்கப்படும் என தெரிகிறது.
இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த போலீஸ் அகாடமி, தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற அகாடமி கிடையாது. இங்கு அமெரிக்க ராணுவத்தினர் பயிற்சி அளிப்பது பெருமையாக இருக்கிறது என்றார்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications