கல்கி-அம்மா பகவான் படத்தில் தேன் வழிகிறது?
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் அருகே கல்கி- அம்மா பகவான் படத்தில் இருந்து தேன் வழிவதாக தகவல் பரவியதால் அப்பகுதியில் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.
கரூர் அருகே உள்ளது வெங்கமேடு கணக்குப்பிள்ளைத் தெருவை சேர்ந்தவர் கமலகண்ணன். கல்கி-அம்மா பகவானின் பக்தரான இவர் டெய்லராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று அவரது வீட்டில் உள்ள பூஜை அறையில் இருக்கும் கல்கி-அம்மா பகவான் படத்தில் இருந்து தொடர்ந்து தேன் வழிந்ததாக கமல கண்ணன், தனது நண்பர்கள் மற்றும் பக்தர்களிடம் கூறியுள்ளார்.
செய்தி காட்டுத்தீ போல பரவியது. இதையடுத்து கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி என பல மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கரூர் பக்கம் படையெடுத்து வருகின்றனர். இதையடுத்து அவரது வீட்டின் முன் மக்கள் கூட்டம் குவிந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications