திருக்குறளை தலைகீழாக எழுதி தஞ்சை வி.ஏ.ஓ. சாதனை !
தஞ்சை: தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே வசிக்கும் கிராம நிர்வாக அலுவலர் வடிவேல் என்பவர் திருக்குறளை தலைகீழாக எழுதி சாதனை படைத்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள நாடியத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் வடிவேல் (28).
இவர் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே திருக்குறள் பற்றிய விழிப்புணர்வை கடந்த சில வருடங்களாக ஏற்படுத்தி வருகின்றார்.
இதனையடுத்து, 1330 திருக்குறளை தலைகீழாக எழுதி சாதனை படைத்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் வடிவேல் கூறுகையில்,
இன்றைய இளைஞர்கள், மாணவர்கள் திருக்குறளை படித்து வாழ்வில் முன்னேற வேண்டும். திருக்குறளில் இல்லாத விஷயங்களே இல்லை. மனிதன் மனிதனாக வாழ்வதற்கு திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும். பொதுமக்கள் மத்தியில் திருக்குறள் பற்றிய ஒரு விழுப்புணர்வை ஏற்படுத்தவே 1330 குறளையும் தலைகீழாக எழுதி வருகிறேன் என்றார்.
இவர் ஏற்கனவே 1330 குறளை தலை கீழாக சொல்லி குறள் மணி என்ற விருதையும் பெற்றுள்ளார்.