குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு மனித நேய விருது
Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு சிறந்த மனிதநேயர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஈரோடு டாக்டர் ஜீவானந்தத்திற்கு சிறந்த சமூக சேவகர் விருதும், தமிழ்நாடு காந்தி நினைவு நிதி தலைவர் கே.எம்.நடராஜனுக்கு சிறந்த காந்திய நிர்மாண பணியாளர் விருது வழங்கப்பட்டது.
மேலும், இயற்கை விவசாயி அந்தோணிசாமிக்கு சிறந்த பாரம்பரிய இயற்கை விவசாயி என்ற விருது வழங்கப்பட்டது.
இவர்களுக்கு மத்திய அரசு புவி அறிவியல் துறை செயலர் சைலேஷ் நாயக் விருதுகளை வழங்கி கவுரப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications