ஆகஸ்ட் 1 முதல் அண்ணா ஹஸாரே உண்ணாவிரதம்!

அவர் கூறுகையில்,
மக்கள் நலன்களுக்காக அரசு சட்டங்களை இயற்றுகிறது. ஆனால், அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசு தோல்வியடைந்துவிட்டது.
பெரும்பாலான சட்டவிரோத நடவடிக்கைகளிலும், முறைகேடுகளிலும் அரசியல்வாதிகளும், அவர்களது கூட்டாளிகளும்தான் ஈடுபடுகின்றனர். இது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.
இத்தகைய அரசியல்வாதிகள் விஷயத்தில் அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. ஆனால், சாதாரண நிலையில் உள்ள மக்களை அரசு துன்புறுத்தி வருகிறது. ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காகவும், நிர்வாகச் சீர்கேடுகளுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்ள இருக்கிறேன்.
முழு மது விலக்கை அரசு உறுதியுடன் அமல்படுத்த வேண்டும். இதேபோல, கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உள்பட நிதி நிறுவனங்களில் நடைபெறும் பண மோசடிகளைத் தடுப்பதற்கான சட்டங்களையும் அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.
கிராமங்களில் கிராம சபை ஒப்புதல் இல்லாமல் சாராயக் கடைகளுக்கு உரிமம் வழங்கக் கூடாது. விவசாயிகளுக்கு தேவையான அளவு பயிர்க் கடன்களை வழங்க வேண்டும்.
கிராமங்களில் செயல்படும் அன்னிய தயாரிப்பு மதுபானக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications