For Daily Alerts
Just In
கோவையில் பாலியல் கொடுமைகள்-விசாரிக்க உத்தரவு
கோவை: கோவை மாவட்டத்தில் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை குறித்து பொது விசாரணை நடத்த மகளிர் ஆணையம் முடிவு செய்துள்ளது என்று கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உமாநாத் கூறுகையில்,
கோவையில் உள்ள கல்லூரிகள், பல்கலை.களில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை குறித்து பொது விசாரணை நடத்தப்படும்.
பாலியல் வன்கொடுமை குறித்த புகார்களை ஜூலை 31-க்குள் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையர், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் ஆணையத்தின் இ.மெயில் முகவரிக்கும் தகவல் அனுப்பலாம் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு கோவை விசாரணை inquiry tamilnadu human rights commission மனித உரிமை ஆணையம் பாலியல் வன்கொடுமைகள்
Story first published: Thursday, July 23, 2009, 11:18 [IST]