For Quick Alerts
For Daily Alerts
Just In
திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை என்எச் 45 திறப்பு!
சென்னை: திண்டிவனம் - உளுந்தூர்பேட்டை இடையேயான 73 கிமீ தூர தேசிய நெடுஞ்சால பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவிடப்பட்டது.
பயனாளர்கள் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் வகையில், பெங்களூரைச் சேர்ந்த ஜிஎம்ஆர் நிறுவனம் உருவாக்கியுள்ள நெடுஞ்சாலை இது. தேசிய நெடுஞ்சாலை 45-ல் அமைந்துள்ளது.
'நிர்மாணித்தல் பராமரித்தல் பின்னர் அரசிடம் ஒப்படைத்தல்' எனும் அடிப்படையில் (BOT) இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள இரண்டாவது தேசிய நெஞ்சாலை இது. இந்த மொத்த செலவு ரூ.828 கோடியாகும். 20 ஆண்டு கலாம் இங்கு சுங்கச் சாவடிகள் செயல்படும், வாகனக் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
இந்த சாலையால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேலும் நெரிசல் குறையும், வணிகப் போக்குவரத்தும் விரைவடையும் என ஜிஎம்ஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments
Story first published: Wednesday, July 29, 2009, 17:50 [IST]