For Daily Alerts
Just In
இஸ்ரோ தலைவர் மாதவன் நாயருக்கு கே.ஆர்.நாராயணன் விருது
கொச்சி: இஸ்ரோ தலைவர் மாதவன் நாயருக்கு 2008ம் ஆண்டுக்கான கே.ஆர்.நாராயணன் விருது கிடைத்துள்ளது.
செப்டம்பர் 4ம் தேதி கொச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவருக்கு விருது வழங்கப்படுகிறது.
கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பன்னூர்நாத் விருதினை வழங்கிச் சிறப்பிப்பார்.
கே.ஆர்.நாராயணன் நினைவு உரையையும் நிகழ்ச்சியில் ஆற்றவுள்ளார் மாதவன் நாயர்.
இத்தகவலை கே.ஆர்.நாராயணன் பவுண்டேஷன் பொதுச் செயலாளர் எபி ஜோஸ் தெரிவித்துள்ளார்.
Story first published: Wednesday, September 2, 2009, 14:12 [IST]