For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சமூக சேவகர் தீப் ஜோஷிக்கு மகசேசே விருது

By Staff
Google Oneindia Tamil News

Deep Joshi
மணிலா: இந்தியாவில் தொண்டு நிறுவனங்களின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியதறகாக சமூக சேவகர் தீப் ஜோஷிக்கு பிலிப்பைன்ஸை நாட்டின் ராமோன் மகசாசே' விருது வழங்கப்படுகிறது.

கிராமப் பகுதி மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்டு வரும் ஜோஷிக்கு வயது 62. எம்.ஐ.டியில் நிர்வாகவியலில் பட்டம் பெற்ற அவர், 30 ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டுள்ளார்.

ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படும் இந்த விருதைப் பெற ஜோஷி, மியான்மரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் கா சா வா, எய்ட்ஸ் நோய்க்கு குறைந்த விலை மருந்து கண்டுபிடித்த தாய்லாந்து விஞ்ஞானி கிரிஸனா கிரைசின்டு,

நீர் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் சீனாவைச் சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளர் மா சுன், இயற்கை ஆர்வலர் யூ ஸியோகங், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த வழக்கறிஞர் அன்டோனியோ ஒபோசோ ஆகியோரும் இந்தாண்டுக்கான மகசேசே விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வினோபா பாவே, கிரண் பேடி, அருண் ராய் உள்ளிட்ட இந்தியர்கள் இந்த விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மணிலாவில் வரும் 31ம் தேதி நடைபெறும் விழாவில் இந்த 6 பேருக்கும் மகசாசே விருதுகள் வழங்கப்படுகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X