சங்கரன்கோவிலில் இன்று ஆடித்தபசு-லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
ஆடித்தபசு திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தின்மும் சுவாமி அம்மாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனையும் நடைபெற்றன. 9ம் திருநாளான நேற்று முன்தினம் கோமதி அம்மாள் தேரோட்டம் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தபசுக்காட்சி நேற்று மாலை 6 மணிக்கு நடந்தது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. மதியம் 1 மணிக்கு அம்பாள் ஒற்றை காலில் நின்று தவம் செய்யும் கோலத்தில் தபசு மண்டபத்தில் எழுந்தருளினார்.
மாலை 6 மணிக்கு சுவாமி சங்கர நாராயணராக அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் வீதி உலா சென்று கோவிலை அடைந்தார்.
இன்று இரவு 11 மணிக்கு சுவாமி மீண்டும் புறப்பாடாகி மண்டபத்தில் தபசு இருக்கும் அம்பாளுக்கு சங்கரலிங்கராக காட்சி கொடுக்கிறார்.
இதைக் காண தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.