போலி மகளிர் சுய உதவி குழுக்கள்!
மதுரை: தமிழகத்தில் அதிகரித்து வரும் போலி மகளிர் சுய உதவி குழுக்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் முழுவதும் மகளிர் சுய உதவி குழுக்கள் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த குழுக்கள் மூலம் பெண்களுக்கு சுய தொழில் மேற்கொள்ள வங்கிகள் மூலம் மானிய கடன்கள், அரசின் உதவிகள், சிறப்பு பயிற்சிகள் என பல சலுகைகளை அளித்து தமிழக அரசு உற்சாகப்படுத்தி வருகின்றது.
இந்த அமைப்புகளுக்கு தேவையான நிதிகள் தொண்டு நிறுவனங்களின் மூலம் அளிக்கப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் தற்போது பல்வேறு இடங்களில் உள்ள தொண்டு நிறுவனங்களில் ஒரே மகளிர் சுய உதவி குழுக்கள் பல்வேறு பெயர்களில் பதிவு செய்து கொண்டு வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முயற்சிகள் நடைபெறுவதும் அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதை தொடர்ந்து போலி மகளிர் குழு குறித்து கண்காணித்து அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் போலி மகளிர் சுய உதவிக்குழுக்களை கட்டுப்படுத்த முடியும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
-
அடி தூள்! காலையில் கோரிக்கை.. மாலையே நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்.. பத்திரிகையாளர் பென்ஷன் உயர்வு! -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications