டிக்கெட் முறைகேடு-3 திருப்பதி கோவில் ஊழியர்கள் கைது
ஹைதராபாத்: திருப்பதி கோவிலில் விஐபி டிக்கெட்டுகள் வழங்குவதில் முறைகேடு செய்த ஊழியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் பணக்கார கடவுளான திருப்பதி வெங்கடசேபெருமானை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதையடுத்து விஐபிக்களுக்கு ரூ. 500க்கு விசேஷ விரைவு தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமீபகாலமாக இதில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஆதிகேசவலு நாயுடுவுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
எம்.பி., எம்எல்ஏக்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களிடம் இருந்து சிபாரிசு கடிதம் கொடுக்கப்பட்டால் மட்டுமே இந்த விஐபி டிக்கெட்டுகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், ஊழியர்கள் சிலர் பணம் பெற்று கொண்டு விஐபி தரிசன டிக்கெட்டுகளை வினியோகித்து வருவதாக கூறப்பட்டது.
இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் டிக்கெட் வழங்கும் பணிகளை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது டிக்கெட் வழங்கும் ஊழியர்கள் ஆனந்த், பிரபாகர் ராஜ், பிரசாத் ஆகியோர் முறைகேடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications