For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்த வேண்டும்-பர்னாலா

By Staff
Google Oneindia Tamil News

Surjit Singh Barnala
சென்னை: மாணவர்கள் நூலகத்தை நன்றாக பயன்படுத்தி தங்களது அறிவாற்றலை வளர்த்து கொள்ள வேண்டும் என தமிழக ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா தெரிவித்துள்ளார்.

சென்னை ஆளுனர் மாளிகையில் நேற்று ஸ்ரீசுமதி விஷால் ஜெயின் அறக்கட்டளை சார்பில் 19வது ஆண்டாக ஏழை மாணவர்களுக்கு இலவச பாட புத்தகம் வழங்கும் விழா நடந்தது.

இதில் தமிழக ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் 1,200 மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

அப்போது பர்னாலா பேசுகையில்,

தற்போது தகவல் தொழில்நுட்ப துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஏழை மாணவர்கள் இன்டர்நெட் சேவைகளை பயன்படுத்தி பயன்பெற தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும்.

புத்தகங்கள் மாணவர்களுக்கு மிகுந்த பயனுயுள்ளதாக இருக்கும். கல்லூரி மற்றும் பொது நூலகங்களில் உள்ள புத்தகத்தை பயன்படுத்தி மாணவர்கள் அறிவுத் திறனை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார் பர்னாலா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X