கள்ள நோட்டுக்கு குவார்ட்டர் கேட்டவருக்கு சிறை
தென்காசி: தென்காசி அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 100 கள்ள நோட்டைக் கொடுத்து அதற்கு 'குவார்ட்டர்' கேட்டு மிரட்டியவருக்கு தென்காசி நீதிமன்றம் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
தென்காசி அருகே சேர்ந்தமரம் பழைய போலீஸ் ஸ்டேஷன் தெருவில் வசிப்பவர் ஆறுமுகம். இவர் அப்பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார். இவர் கடந்த 17.12.2007 அன்று இரவு, சேர்ந்தமரம் டாஸ்மாக் கடைக்கு சென்று ரூ. 100 நோட்டை கொடுத்து குவாட்டார் கேட்டுள்ளார்.
அவர் கொடுத்த ரூ. 100 நோட்டை பார்த்த கடை சேல்ஸ்மேன் சக்திவேல் அது கள்ளநோட்டு என்பதை கண்டுபிடித்தார். இதையடுத்து அவர் சரக்கு தர முடியாது என கூறிவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் கத்தியை காட்டி சேல்ஸ்மேனை மிரட்டியுள்ளார். இதையடுத்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் ஆறுமுகத்தை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். அந்த கள்ளநோட்டையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த தென்காசி கூடுதல் உதவி செசன்ஸ் நீதிபதி பிருந்தா, அவருக்கு ரூ. 3 ஆயிரம் அபராதமும், மூன்று ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.












Click it and Unblock the Notifications