தமிழகம் முழுவதும் தமி்ழ்த் தேசிய எழுச்சி நாள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை தமிழகத்தை ஆக்கிரமிக்கும் வெளியாரை வெளியேற்ற வேண்டும், ஈழத் தமிழ் அகதிகளை வாழ்விடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும், தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி சார்பில் நேற்று தமிழ்த் தேசிய எழுச்சி நாள் போராட்டங்கள் நடைபெற்றன.

தமிழகம் தான் இழந்த உரிமைகளை மீட்கவும், ஈழ விடுதலைக்கு துணை நிற்கவும் உறுதி ஏற்றுக் கொள்ளும் நாளாக இந்நாள் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சியின் திருச்சி மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று தமிழ்த் தேசிய எழுச்சி நாள் தமிழகமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது.

தஞ்சையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. மேரி முனையில் தொடங்கிய பேரணியை தஞ்சை நகரச் செயலாளர் இரா.சு.முனியாண்டி பேரணியை ஒருங்கிணைத்தார்.

பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இப்பேரணியின் முகப்பில் சிலம்பாட்டம், சுருளாட்டம் ஆகிய வீர விளையாட்டுகள் அணிவகுத்தன.
பேரணியின் நிறைவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில், பெருந்திரள் மக்கள் கலந்து கொண்ட எழுச்சிமிகுக் கூட்டம் நடைபெற்றது.

கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் நிறைவுரையாற்றினார். தமிழ்நாட்டு உரிமைகளை மீட்க வேண்டியதின் அவசியம் குறித்தும், முள்வேலிகளுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக் கோரியும் பெ.மணியரசன் கருத்துரை வழங்கினார்.

சென்னையில், வெங்கட்ராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிதம்பரம் பெரியார் சதுக்கத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடந்த போராட்டத்திற்கு, நகரச் செயலாளர் கு.சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார்.

ஈரோட்டில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் லோகநாதபுரத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி நாள் கலை நிகழ்வுகள் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் மருத்துவர் ச.அர.மணிபாரதி தலைமை தாங்கினார்.

மதுரையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஜான்சி ராணி புங்கா அருகில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மாநகரச் செயலாளர் ரெ.இராசு தலைமை தாங்கினார்.

ஓசூரில் நடந்த போராட்டத்திற்கு முத்தாலு தலைமை தாங்கினார்.

இதேபோல திருச்சி, கோவை, திருத்துறைப்பூண்டி, ஆத்தூர், புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டங்கள் நடந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+