சேலம்-திருப்பதி தினசரி ரயில் விட கோரிக்கை
சேலம்: தமிழகத்தின் மேற்கு, மற்றும் வடக்கு மாவட்ட மக்கள் நலன் கருதி சேலத்தில் இருந்து திருப்பதிக்கு தினசரி ரயில் விடவேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அன்னமய்யா ஆசிரம டிரஸ்ட் துணைத் தலைவர் எஸ்.எம்.நாராயணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் இருந்து சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு போன்ற மாவட்ட பொது மக்கள் பல்லாயிரம் பேர் தங்களது குடும்பத்தினருடன் தினசரி திருப்திக்கு சென்று அருள்மிகு வெங்கடாஜலபதி ஸ்வாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
இவ்வாறு செல்லும் மக்கள் சாலை வழியாக செல்வதை காட்டிலும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். காரணம் வயதானவர்கள் , குழந்தைகள் ஆகியோருக்கு ரயில் பயணமே சிறந்தது.
தற்போது திருப்தி செல்ல சேலத்தில் இருந்து ஜோலார்பேட்டை வரை பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. அங்கிருந்து வண்டி மாறி காட்பாடி சென்றால் மட்டுமே திருப்திக்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. இந்த ரயிலை ஜோலார்பேட்டையில் நிறுத்தம் செய்வதற்கு பதில் காட்பாடி வரை நீடிப்பு செய்யலாம்.
மேலும், சேலத்தில் இருந்து தினசரி காலை மாலை என இரு வேளைகளில் திருப்பதிக்கு பாசஞ்சர் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும்.
இது குறித்து ரயில்வேத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளோம். எங்களது கோரிக்கைய தமிழக அரசும் பரிந்துரை செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications