For Daily Alerts
Just In
இலங்கைத் தமிழ் பத்திரிக்கையாளரை விடுவிக்க கோரி சென்னையில் கூட்டம்
சென்னை: தமிழர்கள் வாழ்வுரிமைக்காக பாடுபட்ட இலங்கைப் பத்திரிக்கையாளர் ஜே.எஸ். திசநாயகத்தை விடுதலை செய்யக் கோரி சென்னையில் நாளை கூட்டம் நடைபெறுகிறது.
பத்திரிகை சுதந்திர பாதுகாப்புக் கூட்டம் என்ற பெயரில் நடைபெறும் இக்கூட்டம் சென்னை அரசினர் ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்துள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும்.
மூத்த பத்திரிக்கையாளர் இரா. ஜவஹர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பொதுச் செயலாளர் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பாரதி தமிழன், சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் ஆர். மோகன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஊடகப் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.
Comments
Story first published: Monday, September 7, 2009, 13:45 [IST]