For Daily Alerts
Just In
எம்.ஏ.எம். ராமசாமிக்கு 'மகாகவி பாரதி' விருது
சென்னை: பாரதியார் சங்கத்தின் இந்த ஆண்டுக்கான 'மகாகவி பாரதி' விருது தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமிக்கு வழங்கப்பட்டது.
சென்னையில் நடந்த இந்த விழாவுக்கு தொழிலதிபர் 'அருட்செல்வர்' என்.மகாலி்ங்கம் தலைமை தாங்கினார்.
மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் இந்த மகாகவி பாரதி விருதை வழங்கினார். எம்.ஏ.எம். ராமசாமி சார்பில் இந்த விருதை ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளையின் கெளரவச் செயலாளர் ஏ.ஆர்.ராமசாமி பெற்றுக் கொண்டார்.
வாசன் பேசுகையில், பாடல்கள் மூலம சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்டவர் பாரதி. பெண்கள் முன்னேற்றம், ஜாதி ஒழிப்புக்கும் குரல் தந்தவர் என்றார்.
படைப்புகளை மொழி பெயர்க்க வேண்டும்:
தொழிலதிபர் என்.மகாலி்ங்கம் பேசுகையில், பாரதியாரின் படைப்புகளை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்க வேண்டும் என்றார்.
Comments
Story first published: Saturday, September 12, 2009, 14:43 [IST]