For Daily Alerts
Just In
அரசு ஊழியர் சங்க மாநில தலைவராக மதுரை தமிழ்ச்செல்வி தேர்வு
கோவை: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவராக மதுரையைச் சேர்ந்த இரா. தமிழ்ச்செல்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் நடைபெற்று வந்த அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டின் நிறைவு நாளான சனிக்கிழமை அன்று புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி, மாநிலத் தலைவராக மதுரைச் சேர்ந்த இரா.தமிழ்ச்செல்வி தேர்வு செய்யப்பட்டார்.
அதே போன்று, பொதுச் செயலாளராக இரா.சீனிவாசன் பொருளாளராக என். இளங்கோவும் துணைத் தலைவர்களாக பா.ரவி, எஸ்.சிவக்குமார் இரா.பாலசுப்பிரமணியன், இரா.பீட்டர் பர்னபாஸ் கே.தங்கராஜ், பி.எஸ்.அப்பர் ஆகியோர் தேர்வு பெற்றனர்.
மேலும், மாநிலச் செயலர்களாக என்.குமாரவேல் , எம்.அன்பரசு ஆ.செல்வம் கணபதி, என்.ரங்கநாதன் , எஸ்.தமிழ்ச்செல்வியும், தணிக்கையாளர்கள் - உ.மதியழகன், மு.சுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு பெற்றனர்.
Comments
Story first published: Sunday, September 20, 2009, 12:04 [IST]