இந்தியா சுடரின் அன்பாலய அறிவு திருவிழா
சென்னை: இந்தியா சுடர் அறக்கட்டளையின் அன்பாலயங்களுக்கான அறிவு திருவிழா வரும் 11.10.09 அன்று சென்னையில் நடக்கிறது.
சென்னை தி.நகரில், பாண்டிபஜார் காவல் நிலையத்துக்கு எதிரே உள்ள ராமகிருஷ்ண மிஷன் மேல்நிலைப் பள்ளியில் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விழாவில் அன்பாலயங்களில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில் சில ஐஏஎஸ் அதிகாரிகளை பங்கேற்க செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிகள் கருத்தரங்கு, போட்டிகள் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. கருத்தரங்கில் தன்னம்பிக்கையூட்டும் கதைக்களம், சூடாகும் பூமி, மேற்படிப்பு குறித்த உரையாடல் ஆகியவை நடக்கிறது.
மேலும், ஓவியம், திருக்குறள் திறனாய்வு தேர்வு, வினாடி வினா, மொழி பெயர்ப்பு ஆகிய போட்டிகள் நடக்கின்றன.
இந்த போட்டியில் கலந்து கொள்ள அன்பாலயங்களை சேர்ந்த மாணவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு மதிய உணவும், பயணப்படியும் வழங்கப்படும். நுழைவு கட்டணங்கள் எதுவுமில்லை. அன்று காலை 8.30 மணிக்கு பெயர் பதிவு ஆரம்பமாகிறது.
மேலும், தகவல்களுக்கு www.indiasudar.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்.