புதுச்சேரியில் துளிப்பா (ஹைக்கூ) குறித்த ஆய்வரங்கம்
புதுச்சேரியிலிருந்து வெளிவரும் கரந்தடி இதழ் சார்பாக 11.10.2009 ஞாயிறு அன்று துளிப்பா (ஐக்கூ),நகைத் துளிப்பா(சென்றியு), உரைத் துளிப்பா(ஐபுன்),ஈறு தொடங்கித் துளிப்பா (ஐக்கூ அந்தாதி), இயைபுத் துளிப்பா(லிமரிக்கூ) ஆகியன குறித்த ஒருநாள் ஆய்வரங்கு நடைபெற உள்ளது.
மேற்குறித்த தலைப்பில் ஆய்வுக்கட்டுரை படிக்க விரும்புவோர் புதுவைப் பாவலர் சீனு.தமிழ்மணி அவர்களிடம் செல்பேசியில் (+91 94436 22366)தொடர்பு கொள்ளலாம்.
அயல் நாட்டினர் கட்டுரை அனுப்ப விரும்பினால் என் மின்னஞ்சல் [email protected] முகவரிக்குக் கட்டுரையை அனுப்ப ஆய்வரங்க அமைப்பாளரிடம் கட்டுரையை ஒப்படைப்பேன்.
தொடர்புகளுக்கு ஏற்பப் பெயரை அழைப்பிதழில் இணைக்க முடியும். ஆய்வுக்கட்டுரைகள் நூல்வடிவம் பெற உள்ளன.
அஞ்சல் முகவரி:
பாவலர் சீனு.தமிழ்மணி
ஆசிரியர்-கரந்தடி,
50,நிலையத்தெரு,சண்முகாபுரம்,
புதுச்சேரி-605 009,இந்தியா
நன்றி - http://muelangovan.blogspot.com/