திருப்பதி லட்டு காப்புரிமை ரத்து- உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்த வழக்கை ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் நெல்லை ஜெபமணியின் மகனும், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியுமான மோகன் ராஜ் தொடர்ந்துள்ளார். அவர் அந்த மனுவில்,
திருப்பதி வெங்கடாசலபதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இது மிகவும் பிரபலம்.
இதை திருப்பதி தேவஸ்தானம் பிரசாதமாக வழங்குகிறது. வியாபார நோக்கத்தோடு விற்கவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் தென்னிந்திய மண்டல காப்புரிமை அலுவலகத்தில் திருப்பதி லட்டுக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. பிரசாத பொருளுக்கு காப்புரிமை வழங்க வேண்டிய அவசியம் இலலை.
விற்பனை செய்யப்படும் பொருளுக்கு மட்டுமே காப்புரிமை வழங்கப்பட வேண்டும். இதனால் திருப்பதி லட்டுக்கு காப்புரிமை வழங்கியது இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது.
இதேபோல் கேரளாவில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலுக்கும், அங்குள்ள கண்ணகி சிலைக்கும் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் ரத்து செய்யவேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு வரும் 12ம் தேதி விசாரணைக்கு வருகிறது












Click it and Unblock the Notifications