திருப்பதி கோவில் சுவர்களில் தங்கமுலாம்-விஎச்பி எதிர்ப்பு
சென்னை: திருப்பித வெங்கடேஸ்வர பெருமான் கோவில் சுவர்களில் தங்கமுலாம் பூசுவதால் அவற்றில் இருக்கும் கல்வெட்டுகள் மற்றும் விலைமதிப்பற்ற வரலாற்று பொக்கிஷங்கள் அழிந்துவிடும் என விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் வேதாந்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த பிரமோற்சவத்தின் போது ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ரூ. 150 கோடி மதிப்பில் திருப்பதி கோவில் சுவர் முழுவதும் தங்கமுலாம் பூசும் பணியை துவக்கி வைத்தார்.
இந்நிலையில் நேற்று இப்பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் வேதாந்தம், திருப்பதி திருமலை தேவஸ்தான தலைவர் ஆதிகேசவலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர்,
இந்து கோயில்கள் நம்நாட்டு வரலாற்று அங்கமாகத் திகழ்பவை. திருப்பதி கோவில் சுவர்களில் பல அரிய செய்திகள் அடங்கிய கல்வெட்டுக்கள் உள்ளன. இவை விலைமதிப்பற்ற நமது பாரம்பரியம் மற்றும் வரலாற்றை தாங்கி நிற்கிறது.
கோவில் சுவர் முழுவதும் தங்கமுலாம் பூச வேண்டும் என இந்து சயமத்தை சேர்ந்த எந்த அமைப்பும் கோரி்க்கை வைக்கவில்லை. மாறாக சில தனி நபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தான் இது குறித்து ஆசைப்படுகின்றனர்.
தங்கபூச்சு வேலை மூலம் வரலாற்றினை அழிக்க முற்படுகின்றனர். இது கோவிலின் மத விவகாரத்தில் தலையிடுவதாகும். இந்த பணிகளை தொடரக்கூடாது என விஸ்வ இந்து பரிஷத் கேட்டு கொள்கிறது. விளைவித்த சேதங்களை இதோடு நிறுத்தி கொள்ளுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications