நெல்லையப்பர் கோயில் தங்கத் தேர் நவம்பரில் வெள்ளோட்டம்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையப்பர் கோயிலில் தங்கத் தேர் வெள்ளோ்ட்டம் நவம்பரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லையர் கோயில் உபயதாரர்கள் மூலம் பன்னிரென்டே முக்கால் அடி உயரம், 8 அடி அகலத்தில் தங்கதேர் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
10 கிலோ தங்கத்தில் உருவாக்கப்படும் இந்த தேரில் மரவேலை மற்றும் செம்பு தகடுகள் பதிக்கும் பணி முடிவடைந்தன. தற்போது வெள்ளி வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது.
தொடர்ந்து தேர் பாகங்களுக்கு தங்க தகடு பொருந்தும் பணி வரும் 27ம் தேதி முதல் துவங்கி 30ம் தேதி வரை நடக்கிறது. இதன் பின் தேர் முழு வடிவம் பெரும்.
நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வரும் நவம்பர் 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்றைய தினம் தங்க தேர் வெள்ளோட்டம் நடத்துவது குறித்து திருப்பணி குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications