பாணதீர்த்த அருவிக்கு செல்வோருக்கு உயிர் காப்பு கவசம் கட்டாயம்
பாபநாசம்: தேக்கடி படகு விபத்தைத் தொடர்ந்து, பாபநாசம் பாணதீர்த்தம் அருவிக்கு படகில் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு உயிர்காப்பு கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தேக்கடியில் இரு வாரங்களுக்கு முன்பு படகு கவிழ்ந்து பல உயிர்கள் பலியாகின. இதை தொடர்ந்து பாபநாசம் அணையிலிருந்து படகில் பாணதீர்த்தம் அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவரும் உயிர் காப்பு கவசம் அணிந்து செல்ல வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று காலை விடுமுறை நாளாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் கூட்டம் பாபநாசத்தில் அலை மோதியது.
மின்துறை உதவி செயற்பொறியாளர் சுடலையாண்டி படகில் செல்லும் சுற்றுலா பயணிகளை கண்காணித்து பாதுகாப்பு கவசம் அணிந்து செல்ல வலியுறுத்தினார்.
பாணதீர்த்தம் அருவிக்கு செல்ல 24 படகுகள் உள்ளன. ஆனால் உயிர்பாதுகாப்பு கவசம் குறைந்த அளவே உள்ளதால் பாதிக்கும் மேற்பட்ட படகுகள் போககுவரத்திற்கு பயன்படுத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பாணதீர்த்த அருவிக்கு செல்ல நீண்ட நேரம் காத்திருந்தனர்.












Click it and Unblock the Notifications