குமரி பகவதியம்மன் கோயிலில் நெரிசலை தடுக்க 'கியூ செட்'
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் ரூ.5 லட்சம் செலவில் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக கியூ செட் அமைக்கப்படும் என தேவசம் போர்டு இணை இயக்குனர் கூறினார்.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கனக்கான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
இந்நிலையில் ஐயப்ப பக்தர்களின் சபரிமலை சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில் பக்தர்களின் கூட்ட நெரிசலை ஒழுங்கு படுத்துவதற்காக 5 லட்சம் செலவில் கியூ செட் அமைக்கப்படுகிறது.
இதற்கான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வந்த தேவசம் போர்டு இணை ஆணையர் தனபால் நிருபர்களிடம் கூறுகையில்,
பக்தர்களின் கூடட நெரிசலை ஒழுங்குபடுத்துவதற்காக கோவில் நிதியில் இருநது ரூ.5 லட்சம் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இரும்பு பைப் மூலம் கோவில் வெளி பிரகாரம் மற்றும் உட்பிரகாரங்களில் 260 மீட்டர் நீளத்திற்கு நிரந்தர கியூ வசதி அமைக்கப்படுகிறது. அதற்கான பணி ஒரிரு நாளில் தொடங்க உள்ளது. இந்த பணி கார்த்திகை மாதம் தொடங்கும் முன் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.