சென்னையில் ஃபிரான்ஸ் அறிவியல் கலாச்சார விழா- அடுத்த மாதம் துவக்கம்
சென்னை: சென்னையில் அடுத்த மாதம் துவங்க உள்ள ஃபிரெஞ்ச் கலை, அறிவியல் விழாவில் பங்கேற்க பிரான்சில் இருந்து 30க்கும் மேற்பட்ட முன்னணி வி்ஞ்ஞானிகள் வரவுள்ளனர்.
ஃபிரான்ஸ் நாட்டு தூதரகம் சார்பில் சென்னையில் வருகிற டிசம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஃபிப்ரவரி வரை, பான்ஜோர் ஃபெஸ்டிவல் என்ற அறிவியல் கலாச்சார விழா நடத்தப்படுகிறது.
இதில், கலை மற்றும் அறிவியல் சார்ந்த 100க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கண்காட்சிகள், கருத்தரங்குகள், இலக்கய கூட்டங்கள், திரைப்பட விழா, உணவு திருவிழா என மூன்று மாதங்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் 250க்கும் அதிகமான கலைஞர்கள், இசைத்துறையினர், ஆய்வாளர்கள் மற்றும் தொழில் துறையினர் பங்கேற்க உள்ளனர்.
மருத்துவம், வானூர்தி தொழில்நுட்பம் முதலாக சுற்றுச்சூழல் போன்ற பலதுறைகளின் மீதும் ஆய்வரங்கம் மற்றும் விவாதங்கள் நடைபெறும். இதற்காக பிரான்சின் முன்னணி விஞ்ஞானிகள சென்னை விரைவில் சென்னைக்கு வரவுள்ளனர்.
திருவிழா நடைபெறும் இடம் மற்றும் விரிவான கால அட்டவணை விரைவி்ல் அறிவிக்கப்படும். இந்தியாவுக்கான ஃபிரான்ஸ் தூதர் ஜெரோம் பொனாஃபான்ட் இத்தகவலை தெரிவி்த்தார்.












Click it and Unblock the Notifications